இரண்டாம் பதிவாக ஒரு கவிதையும் கதையும் எழுதலாம் என்று...கவிதைஅரசு பேருந்தில் சென்றால்
அவசரத்துக்கு ஆகாது,
private பஸ்ஸில் service
அருமையாக இருக்கும்
அவசரமாய் ஏறினார்.....
அந்த
அரசாங்க அதிகாரி.(குறுங்)கதை - வல்லவனுக்கு வல்லவன்"என்னதான்டா சொல்றான் அந்த கிழவன்?" உறுமினார் துளசிங்கம்.
"ஐயா, அவங்க வீட்டு சுவரில எந்த கட்சி சின்னமும் வரையக் கூடாதாம். வரைஞ்சா, அந்த கட்சிக்கு வோட்டு போட மாட்டாராம். அவங்க வீட்டு ஓட்டு ஒன்னு கூட விழாதாம்."
"விடுங்க ஐயா, நம்ம கட்சி விளம்பரத்தை வேற இடத்தில் வரைஞ்சா போச்சு." ஆறுதல் கூறிய ஆறுமுகத்தை வெறியோடு பார்த்தார், துளசிங்கம்.
"முட்டாள் மாதிரி பேசறியே! அது நாலு ரோடு கூடற இடம். அது போக, அந்த வீட்டு பக்கத்திலேயே இரண்டு பூத்து இருக்குது தெரியுமில்ல? அங்க விளம்பரம் எழுதினாதான் நம்ம கட்சிக்கு ரொம்ப நல்லது. பேசாம கிழவனை ஒரு தட்டு தட்டிட்டு நம்ம கட்சி மயில் சின்னத்த வரைஞ்சுட்டு வாடா"
"ஐயா, அதிலே ஒரு பெரிய சிக்கல் இருக்கு. அந்த பெரியவருக்கு அந்த ஏரியாவுல செல்வாக்கு இருக்கு. அவர் கூடாதுன்னு சொன்னா, கிட்டத்தட்ட ஐந்நூறு வோட்டு நமக்கு எதிரா திரும்பிடும்"
"இப்ப என்னதாண்டா செய்யுறது?" கையைப் பிசைந்து யோசித்தார் துளசிங்கம்.
பட்டென்று ஒரு யோசனை தோன்றியது.
"ஏய், இப்படி செஞ்சா என்ன? அவங்க வீட்டு சுவத்திலே நம்ம எதிர் கட்சி சின்னமான பூனை படத்தை வரைஞ்சுட்டு எதிர் கட்சிக்கு வோட்டு கேட்டு எழுதிட்டு வந்துடு. அப்போ, எல்லா வோட்டும் நம்ம கட்சிக்கே வந்துடும். எப்படி?"
"ஐயா, சூப்பர் ஐடியாங்க. இப்படி செஞ்சா நிச்சயமா நம்ம கட்சி ஜெயிச்சிடுங்க. நான் ராத்திரியோட ராத்திரியா போய் வேலையை முடிச்சிடறேன்" உற்சாகமாக போனான் ஆறுமுகம்.
இரவு பன்னிரண்டு மணிக்கு பெரியவர் வீட்டை அடைந்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே, அந்த சுவரில்....
துளசிங்கம் கட்சியின் சின்னமான மயில் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.
நீதி: வல்லவனுக்கு வல்லவன், வையகத்தில் உண்டு.