எத்தனையோ மொக்கைக் கதைகளையும் கவிதைகளையும் எழுதிக் கொண்டிருக்கும் கதாசிரியர்களுக்கும், கவிஞர்களுக்கும் இந்தப் பதிவு பயன்படுமா என்பது தெரியவில்லை. கவிதை எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்குக் கூட இது பயன்படுமா என்றும் புரியவில்லை.
இருந்தாலும், கவிதை எழுதுவது எப்படி என்று சொல்லித் தரவேண்டும் என்று பல புலவர்கள் என் கனவில் வந்து வற்புறுத்துவதால் எனக்குத் தெரிந்த அளவில் கவிதை எழுதுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்கிறேன்.
முதலாவதாக, கவிதை எழுதுவதற்கு தனியாக மூளை தேவை இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தமிழ் எழுத்துக்கள் எத்தனை என்ற அறிவு கூட தேவை இல்லை.
உங்களுக்குத் தமிழில் எழுதத் தெரியுமா? அது போதும்.
சரி, பாடத்துக்கு வருவோம்.
எல்லோரும் ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள், கூடவே ஒரு பேனாவையோ பென்சிலையோ எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது, காகிதத்தில் பேனாவால் "க" என்று எழுதுங்கள். எழுத்தின் அளவு உங்கள் மனதிற்கு உகந்த வகையில் இருக்கலாம்.
இப்போது "க"விற்குப் பக்கத்தில் அதே அளவில் "வி" என்று எழுதுங்கள். குட். இப்பொழுது உங்கள் காகிதத்தில்
"கவி" என்று இருக்கிறதா?
நல்லது. இப்போது அதற்குப் பக்கத்தில் அதே அளவில் "தை" என்று எழுதுங்கள்.
அவ்வளவுதான் "கவிதை" எழுதி விட்டீர்கள்.
இப்போது சொல்லுங்கள், கவிதை எழுதுவது சுலபம்தானே!
சிறந்த கவிதை எழுதுவது எப்படி என்று அடுத்த பதிவில் பார்க்கலாமா?