அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, October 10, 2011

நான் என் மகளிடம் வாங்கிய பல்பு - பாகம் இரண்டு

முன் டிஸ்கி: இது சென்ற பதிவின் தொடர்ச்சி 

அந்தப் புதிருக்கு விடை பதிவின் பின்னூட்டத்திலேயே இருக்குது. நான் என் மகளிடம் விடையைச் சொன்னேன். "ஆஹா..........." என்று அதிர்ந்தவள் "சரி, நான் ஒரு புதிர் கேக்குறேன், நீ பதில் சொல்லு" என்றாள்.

"அமாவாசை கும்மிருட்டு. ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ரோட்டிலயும் விளக்கு இல்லை, கார்லயும் லைட்டு எரியலை. ஒரு ஆளு காரை ஓட்டிகிட்டு வர்றாரு, இன்னொரு வயசானவரு கருப்பு குடையைப் பிடிசுகிட்டு கைல டார்ச் லைட்டும் இல்லாம நடந்து வர்றாரு. இருந்தாலும்,இந்த டிரைவர் அந்த வயசானவர் மேல மோதாம காரை ஓட்டிகிட்டு போயிடறாரு, எப்படி?"

நான் ரொம்ப யோசித்தேன். என்னால் பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கி "சரி, நீயே சொல்லு", என்றேன்! என்ன பதில் சொல்லியிருப்பாள், நான் பல்பு வாங்கியது எப்படி? விவரம் நாளை மாலை! உங்கள் யூகங்களை பின்னூட்டலாம்.

Saturday, October 8, 2011

ஒரு விடுகதையின் மற்றொரு கோணம் (அல்லது நான் என் மகளிடம் வாங்கிய பல்பு)

விடுமுறை நாட்களில் என் இரு மகள்களிடமும் விடுகதை சொல்லி வேடிக்கை காட்டுவது என் வாடிக்கை. இன்று காலை நான் ஒரு விடுகதை புதிர் போட்டேன், அது இதுதான்:
"ஒரு அமாவாசை அன்னிக்கு ஒரு ஆளு காருல வேகமா ஓட்டிகிட்டு போறாரு. அப்போ கார் விளக்கு ஏதோ ஒரு காரணத்தால எரியலை. ரோட்டிலையும் எந்த லைட்டும் எரியலை. மழை வேற "சோ"ன்னு கொட்டிகிட்டிருக்கு. அந்த நேரம் பார்த்து எதிர்ல ஒரு வயசானவரு கறுப்புக் குடை வச்சுகிட்டு வராரு. ஆனாலும், அந்த கார் டிரைவர் அந்த வயசானவரு மேல மோதாம சமாளிச்சு ஓட்டறாரு. எப்படி?"

என் பெரிய பெண் உடனே, "இதுக்கு நான் பதில் சொல்றது இருக்கட்டும், நான் கேக்கறதுக்கு நீ பதில் சொல்லு" என்று சொல்லி கீழ்க் கண்ட கேள்விகளை என்னிடம் கேட்டாள்.

  • அந்த டிரைவருக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? கார் லைட்டு, டயருல  காத்து எல்லாம் செக் பண்ணாம கார எடுத்துகிட்டு போகலாமா? 
  • இப்படிப்பட்ட மழையில அந்தப் பெரியவரு ஏன் வீட்டை விட்டு வெளிய வரணும்?
  • அந்தப் பெரியவரு வீட்டுல உன் வயசுல யாரும் இல்லையா? வயசானவருக்கு  துணையா வந்தா குறைஞ்சா போயிடுவாரு?
  • அட் லீஸ்ட் அந்தப் பெரியவர் கையில ஒரு டார்ச் லைட்டாவது கொடுத்து அனுப்பிசிருக்கலாமே?
  • அந்த டிரைவராவது அந்த பெரியவரை தன் காருல வச்சுகிட்டு பத்திரமா அவரு வீட்டுல விட்டுட்டு போனா குறைஞ்சா போயிடுவாரு?
 இதுக்கு மேலயும் அவகிட்ட விடுகதை போடுவேனா என்ன?

டிஸ்கி : நான் போட்ட புதிருக்கு விடை அனேகமா எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். அதுனால பின்னூட்டத்துல சொல்லலாம். 
டிஸ்கிக்கு டிஸ்கி : இந்த பல்பு இந்தப் பதிவோட நிக்கலை, அடுத்த பதிவுலேயும் தொடரும்.