அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, August 25, 2011

சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்!

முஸ்கி: நம்ம ப்ளாகில் சமைத்துப் பார் பகுதி வரவேண்டும் என்ற நேயர்களின் விருப்பத்தை(??!!) முன்னிட்டு இந்தப் பதிவு.
முதல் நாள் வடித்த சாதம் மீந்து விட்டதா? கவலையே வேண்டாம். நான் சொல்லும்படி செய்தால் பாயசம் தயார்!

தேவையான பொருட்கள்:
பால் - 4 கப்
சேமியா - 2 கப் (வறுத்தது, வறுக்காதது எதுவானாலும் ஓகே)
சீனி - 1 கப்
ஏலக்காய் பொடி  - ஒரு சிட்டிகை
ஒரு கரண்டி நெய்யில் வருத்த முந்திரி பருப்பு (10 ) + உலர் திராட்சை (6

  1. முதலில் மீந்த சாதத்தை அடுப்புக்கு பக்கத்தில் ரெடியாக வைத்துக் கொள்ளவும்.
  2. பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் காய்ச்சுங்கள்.
  3. 3 கப் தண்ணீரை காய வைத்து அதில் சேமியாவை சேர்த்து  கொதிக்க விடவும். சேமியா வெந்ததும் தண்ணீரை நன்றாக வடித்து விடவும்.
  4. பால் கொதித்து கொஞ்சம் வற்றியதும் வேக வைத்த சேமியாவை சேருங்கள். சேமியாவை பாலிலும் வேக வைக்கலாம். ஆனால் எதாவது டெக்னிகல் பால்ட் ஆகி பால்திரிஞ்சு  போயிடுச்சுனா,அப்புறம் பாலும் கிடையாது! பாயசமும் கிடையாது!
  5. 5 நிமிடம் கழித்து வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏல பொடி, சீனி சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது பாயசம் தயார்!
 இனிமேல்தான் முக்கியமான கட்டம் இருக்கிறது:
இப்பொழுது அடுப்புக்குப் பக்கத்தில் உள்ள சாதத்தை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வரவும்.
வாசலில் உள்ள குப்பைத் தொட்டியில் இந்த சாதத்தைக் கொட்டவும்(அல்லது ராஜு சொன்னபடி யாராவது பிச்சைக்காரனிடம் கொடுத்து விடவும்) solliyullathu pol .
வீட்டுக்குள் வந்து பாயசத்தை ருசிக்கவும்.

டிஸ்கி: ஏன் முறைக்கிறீங்க? விலைவாசி இருக்கற நிலைமையில கணக்கு பார்த்து சாதம்  வடிக்கனும், அதை விட்டுட்டு நிறைய வடிச்சு அது மீந்து போச்சேன்னு சாப்பிட்டா அதுனால வர்ற சில வியாதிக்கு தனியா பணம் செலவழிக்கனும்.  ஸோ, திட்டமிட்டு சமைங்க, நலமாக வாழுங்க!

டிஸ்கிக்கு டிஸ்கி: மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சு, அதான், ஹிஹி!

Wednesday, August 17, 2011

மிஸ்டர் எக்ஸ் Rocks


மிஸ்டர் எக்ஸ் முதல் முறையாக ஒரு ஏ.டி.எம் கார்டு வாங்கியிருந்தார். அதை எப்படி பயன்படுத்துவது என்று அவருக்கு தெரியவில்லை. பிறகு நண்பர்கள் கொடுத்த யோசனைப் படி ஒரு ஏ.டி.எம்மில் நுழைந்து அங்கிருந்த செக்கியூரிட்டியை அழைத்தார்,"எக்ஸ்க்யூஸ்மி, பணம் எடுக்கணும் கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?"
செக்கியூரிட்டி உள்ளே வந்து அவரிடம் கார்டை வாங்கினார், "உங்க பாஸ்வேர்ட் சொல்லுங்க" என்றார். பாஸ்வேர்ட் சொன்னதும் அதை அழுத்தி பணம் எடுத்துக் கொடுத்தார்.பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்த எக்ஸ்க்கு திடீரென்று ஒரு பொறி. "பாஸ்வேர்டை யாரிடமாவது சொல்லிவிட்டால் உடனே மாற்றிவிட வேண்டும்" என்று நண்பர்கள் சொல்லியிருந்தார்களே! டக்கென்று செக்கியூரிட்டியிடம் திரும்பி சொன்னார், "என்னோட பாஸ்வேர்டை மாத்தணும், கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?"

**************

மிஸ்டர் எக்ஸ் வேகவேகமாக ஒரு பேங்க் மேனேஜர் ரூமுக்குள் வந்தார்.
"என்ன சார், ஏ.டி.எம்.வச்சிருக்கீங்க? ஒரு நாளைக்கு மேக்சிமம் பத்தாயிரம் ரூபாய் எடுக்கலாம்னு ரூல் இருக்கு இல்ல? உங்க பேங்க் ஏ.டி.எம்.ல போய் கார்டை சொருகி, எட்டாயிரம் ரூபாய் வேணும்னு அழுத்தினா வர மாட்டேங்குது?

மேனேஜர் நிதானமாக சொன்னார், "சாரி சார், உங்க அக்கவுண்ட்ல ரெண்டாயிரம் ரூபாய்தான் இருக்குது"

*************

மிஸ்டர் எக்ஸ் ரொம்ப குண்டாக இருந்ததால், டாக்டர் அவரிடம், தினமும் அஞ்சு கிலோமீட்டர் வாக்கிங் போக சொல்லியிருந்தார். ஒரு நாள் காலை எக்ஸிடமிருந்து டாக்டருக்கு போன் வந்தது.
"சார், நீங்கதான என்னை தினமும் வாக்கிங் போகச் சொன்னீங்க, உங்களால் ட்ரெயின மிஸ் பண்ணிட்டேன்"
டாக்டர்:"புரியும்படி சொல்லுங்க"
எக்ஸ்:"நேத்து நைட் டெல்லிக்கு ட்ரெயின்ல புறப்பட்டேன், டாக்டர்! இன்னிக்கு காலையில வண்டி விஜயவாடா வந்துச்சு. உடனே, இறங்கி அஞ்சு கிலோமீட்டர் வாக்கிங் வந்தேன், ஆனா திரும்பி போனப்போ, ட்ரெயின் போயிடுச்சு!" 
*************
மிஸ்டர் எக்ஸ் தன பையனை போட்டு அடித்துக் கொண்டிருந்தார். 
அவர் மனைவி வந்து "ஏங்க, பையனைப் போட்டு அடிக்கறீங்க?"
எக்ஸ்: " பின்ன என்ன, நாளைக்கு Test இருக்குன்னு சொல்றான், ஆனா புக் வச்சு படிக்க மாட்டேன்றான்"
மனைவி: "ஐயோ, ஐயோ, நாளைக்கு இருக்கறது Typewriting Test"

*************