என்னுடைய இந்தப்
பதிவைப் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் இந்த செய்தி.
இன்று அதாவது 02.05.2010 அன்று நாங்கள் திட்டமிட்டது போல், எங்கள் பள்ளிக்கால நண்பர்களுடன் வெள்ளிவிழா கொண்டாட்டம் நடத்தினோம். அது சமயம், எங்கள் பழைய ஆசிரியர்களை அழைத்து கௌரவப் படுத்தினோம். அவர்கள் நெகிழ்ந்துபோய் எங்களைப் பாராட்டிய தருணம் அது. நாங்கள் மிகவும் மகிழ்ந்து போனோம்.
எங்கள் சந்திப்பை விட, எங்கள் ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்த அந்த நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடந்தது. இதுபோல் ஒரு விழா இது வரை நடந்ததில்லை என்று எல்லோருமே வாழ்த்தினார்கள். விழாவிலிருந்து சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு:
ஆசிரியர்களும் நாங்களும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ :
(எங்கள் சீனியர் மாணவர் வேண்டுகோளுக்கு இணங்க இங்கே பெயர்களுடன் தந்திருக்கிறேன்)
மிக மிக உன்னதமான, ஆனந்தமான அந்த சந்தோஷ தருணங்கள் இனிமேல் வருமா என ஏங்க வைத்த அந்த நிமிடங்கள்- மனம் நிறைந்தது. கண்கள் பனித்தது, இதயம் இனித்தது.