அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Friday, September 9, 2011

உங்கள் வெள்ளைத் துணியில் எலுமிச்சைக் கறையா?

வெள்ளை வெளேர் என்று உடை அணியும் பழக்கம் உள்ள சிலரும் நாட்டில் இருக்கத் தான் இருக்கிறார்கள். (நான் பெரும்பாலும் வண்ண உடைகள் தான் அணிவது வழக்கம். காரணம் என்னுடைய பணியில் வெள்ளை சீருடை அணிய வேண்டியிருப்பதால் மற்ற இடங்களுக்கு செல்லும்போது வண்ண உடைகள்தான் அணிவேன்.
போகட்டும். இப்போது வெள்ளை உடை அணிந்தவர்களுக்கு ஒரு முக்கிய சிக்கல் காத்திருக்கிறது. வெளியே செல்லும்போது ஏதேனும் கறை ஏற்படும்போது அதை போக்குவது எளிதான செயல் அல்ல. அப்படி ஏதேனும் கறை ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி? அதுதான் இந்தப் பதிவில் சொல்ல வருகிறேன்.

பொதுவாகவே துணிகளைத் துவைக்கும்போது வெள்ளை நிற ஆடைகளை தனியாகவும், வண்ணத் துணிகளைத் தனியாகவும் தண்ணீரில் நனைக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதை நினைவில் வைத்திருக்கவும். 

சரி, உங்கள் வெள்ளை உடையில் எலுமிச்சைக் கறை ஏற்பட்டுவிட்டதா? (மேலே உள்ள படத்தைப் பார்க்கவும்) அதற்காக விளம்பரங்களைப் பார்த்து மயங்கி ஏதேனும் டிடர்ஜென்ட் சோப்பை வாங்கி அதை தேய்த்து தேய்த்து கஷ்டப் படவேண்டாம். மிக எளிய வழி ஒன்று இருக்கிறது.

கடைக்குப் போய் கொஞ்சம் எலுமிச்சம்பழங்களை வாங்கிக் கொண்டு வரவும். அதை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். இப்ப்போது அந்த சாறை சட்டையில் அங்கங்கு தெளித்து விட்டால், இப்போது அந்தக் கறைகள் ஒரு தனி டிசைனாகவே தெரியும் அல்லவா?(கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்)
இப்போது ஒரு புதிய சட்டை உங்களுக்குக் கிடைத்து விட்டது. எப்படி நம்ம ஐடியா?


டிஸ்கி : இதே போல் தக்காளி சாஸோ, வேறு ஏதாவது ஜூஸோ கறை  ஏற்படுத்திவிட்டாலும் இதே யோசனையைப் பயன்படுத்தலாம்.

டிஸ்கிக்கு டிஸ்கி: யார் துணியிலாவது ரத்தக் கறை ஏற்பட்டுவிட்டது என்பதற்காக என் ரத்தத்தை பயன்படுத்துவது குறித்து யோசனை எதுவும் செய்து விடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!


இன்ட்லியில் வோட்டு போட இங்கே சொடுக்கவும் (பட்டையில் ஏதோ சிக்கல், ஹிஹி_