முஸ்கி: நம்ம ப்ளாகில் சமைத்துப் பார் பகுதி வரவேண்டும் என்ற நேயர்களின் விருப்பத்தை(??!!) முன்னிட்டு இந்தப் பதிவு.
முதல் நாள் வடித்த சாதம் மீந்து விட்டதா? கவலையே வேண்டாம். நான் சொல்லும்படி செய்தால் பாயசம் தயார்!
- முதலில் மீந்த சாதத்தை அடுப்புக்கு பக்கத்தில் ரெடியாக வைத்துக் கொள்ளவும்.
- பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் காய்ச்சுங்கள்.
- 3 கப் தண்ணீரை காய வைத்து அதில் சேமியாவை சேர்த்து கொதிக்க விடவும். சேமியா வெந்ததும் தண்ணீரை நன்றாக வடித்து விடவும்.
- பால் கொதித்து கொஞ்சம் வற்றியதும் வேக வைத்த சேமியாவை சேருங்கள். சேமியாவை பாலிலும் வேக வைக்கலாம். ஆனால் எதாவது டெக்னிகல் பால்ட் ஆகி பால்திரிஞ்சு போயிடுச்சுனா,அப்புறம் பாலும் கிடையாது! பாயசமும் கிடையாது!
- 5 நிமிடம் கழித்து வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏல பொடி, சீனி சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது பாயசம் தயார்!
இனிமேல்தான் முக்கியமான கட்டம் இருக்கிறது:
இப்பொழுது அடுப்புக்குப் பக்கத்தில் உள்ள சாதத்தை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வரவும்.
வாசலில் உள்ள குப்பைத் தொட்டியில் இந்த சாதத்தைக் கொட்டவும்(அல்லது ராஜு சொன்னபடி யாராவது பிச்சைக்காரனிடம் கொடுத்து விடவும்) solliyullathu pol .
வீட்டுக்குள் வந்து பாயசத்தை ருசிக்கவும்.
டிஸ்கி: ஏன் முறைக்கிறீங்க? விலைவாசி இருக்கற நிலைமையில கணக்கு பார்த்து சாதம் வடிக்கனும், அதை விட்டுட்டு நிறைய வடிச்சு அது மீந்து போச்சேன்னு சாப்பிட்டா அதுனால வர்ற சில வியாதிக்கு தனியா பணம் செலவழிக்கனும். ஸோ, திட்டமிட்டு சமைங்க, நலமாக வாழுங்க!
டிஸ்கிக்கு டிஸ்கி: மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சு, அதான், ஹிஹி!