அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Wednesday, July 25, 2012

ஒரு முக்கிய செய்தி

ரொம்ப நாட்களாகவே (மாதங்களாகவே?) பதிவுலகம் பக்கம் வர முடிவதில்லை அப்படியே வந்தாலும் பிற பதிவுகளை மேலோட்டமாக படித்து விட்டு பின்னூட்டாங்கள் கூட போட முடியாமல் அப்படியே சென்று விட்டேன்.

அதேபோல்என்னாலும் பதிவுகள் போட முடியவில்லை (அது உங்களுக்கு கொஞ்சம் சந்தோஷமாகக் கூட இருக்கலாம்)

அதற்காக என்னை நம்பி வந்துவிட்ட இருநூறுக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை ஏமாற்ற முடியுமா?

எனவே உங்கள் எல்லோருக்கும் தெரிவிக்கும் முக்கிய செய்தி என்னவென்றால் அடுத்தாற்போல் எனக்கு தோன்றும் உணர்வுகளை நிச்சயமாக ஒரு பதிவாக போடுவேன் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவே நான் தரும் முக்கிய செய்தியாகும்.

ஒ..............நோ...........நோ..............நோ பேட் வேர்ட்ஸ்!   

Thursday, July 12, 2012

பல கேள்விகளுக்கு ஒரே பதில்

கேள்விகள்
1. இப்போ "டைம்" என்ன ஆச்சு?

2. நான்கு திசைகள் என்னென்ன?

3. ஒரு ஐஸ்-கிரீம் இருபது ரூபாய். அப்போ இருபது ஐஸ்-கிரீம் என்ன விலை?

4. வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் பொருள் என்ன?

இந்த நான்கு கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் அது
"ஆளை விடுப்பா சாமி!"

ஆச்சரியமா இருக்கா? Ctrl+a போட்டு கீழே படிங்க. யார்கிட்ட இந்த கேள்விய கேட்டாங்கன்னு புரியும்.

முதல் கேள்வி கேட்டது மன்மோகன் சிங் கிட்ட 
ரெண்டாவது கேள்வி கேட்டது கருணாநிதிகிட்ட 
மூணாவது கேள்வி கேட்டது சிதம்பரம் கிட்ட 
நாலாவது கேள்வி கேட்டது கர்நாடக பிஜேபி காரங்ககிட்ட