
புத்தகம் வாங்கி வந்து அதுல இருக்கற மாதிரி பொருட்களையும், காய்கறிகளையும் தயார் செய்து வச்சிகிட்டான்.
அதுல சொல்லி இருக்கற மாதிரியே சில பல விகிதங்களில் எல்லாத்தையும் கலந்து அடுப்பில வச்சு சமைக்க ஆரம்பிச்சிருக்கான்.
வச்சுட்டு வெயிட் பண்றான், பண்றான், சமையல் ரெடி ஆகலை. வெறுத்துப் போய் மனைவிய சமாதனம் செஞ்சு (எஸ், கால்ல விழறதைதான் அப்படி நாசுக்கா சொல்லியிருக்கேன்) அவங்களை கூப்பிட்டு என்ன ஆச்சுன்னு பாக்க சொன்னான்.
அவங்களும் அவனை மன்னிச்சு ("தீபாவளிக்கு ஐயாயிரம் ரூபாயில பட்டுப் புடவை வாங்கித் தரனும்") கிச்சனுக்கு வந்தாங்க. வந்து பாத்துட்டு சொன்னாங்களாம்,
"சமைக்கணும்னா மொதல்ல அடுப்பைப் பத்த வைக்கணும்"
டிஸ்கி : பல்பு வாங்கற விஷயமா இருக்கும்போது எப்பவும் நண்பன் பேர்லதான் போடணும், இது என்னோட டிப்ஸ்.