அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, March 31, 2011

நீதிக் கதை

அந்த மிகப் பெரிய பணக்காரருக்கு கோபமான கோபம். போயும் போயும் தன் ஒரே பெண் அந்த பரம ஏழைப் பையனைக் காதலிக்கிறாளே என்று.
பெண்ணுக்கு பலமுறை புத்தி சொன்னார், அவள் கேட்கவில்லை, கட்டினால் அந்தப் பையனைத் தான் கட்டுவேன் என்று சொல்லிவிட்டாள்.

தனக்குத் தெரிந்த ஒரு கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆளைக் கூப்பிட்டு அவனைக் காலி செய்யும்படி சொன்னார்.  ஆனால் அவன் அந்த ஆட்களை அடித்து நொறுக்கி விட்டான்.

பொறுக்க முடியாத அவர் தானே அவனை நேரில் சந்தித்து அவனை தன் பெண்ணை மறக்கும்படி கூறினார். அவன் மறுத்தான். கொதித்துப் போன அவர் தன்னுடைய கத்தியால் அவனைக் குத்திவிட்டார். குத்தும்போது அவருடைய கையைக் கத்தி கீறி விட்டது. அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு அவனை மலையிலிருந்து கீழே உருட்டிவிட்டு நிம்மதியாய் வீடு வந்து சேர்ந்தார்.

மலையிலிருந்து விழுந்த அவன் சிலரால் காப்பாற்றப் பட்டு சில நாளில் முழுதும் குணம் அடைந்து விட்டான். காதலியைச் சந்தித்த அவன் அவளுடைய தந்தையின் சதிச் செயலைப் பற்றி சொன்னான். ஆத்திரமடைந்த அவள் போலீசில் புகார் செய்தாள். ஆனால் ஆதாரம்?

சட்டென்று அவனுக்குத் தோன்றியது. தன்னை அவர் கொல்ல முயன்றபோது போட்டிருந்த சட்டையில் இன்னும் ரத்தக் கறை இருந்தது. அது மட்டுமல்லாமல், கத்தி அந்தப் பணக்காரருடைய கையைக் கீறியபோது வந்த அவருடைய ரத்தக் கறையும் அந்த சட்டையில் இருந்தது. எனவே அந்த ரத்தக் கறையில் இருந்த DNA டெஸ்ட் மூலம் அது அவருடைய ரத்தம்தான் என்று நீதிமன்றத்தில் ஊர்ஜிதம் செய்யப் பட்டது.  

நீதிமன்றம் அந்தப் பணக்காரருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை கொடுத்தது. மனம் திருந்திய அவர் தன்னுடைய பெண்ணை அவனுக்கே திருமணம் செய்து கொடுத்தார்.

இந்தக் கதையில் இருந்து தெரியும் நீதி என்ன?

..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..


அந்தப் பணக்காரர்தான் கொலை செய்ய முயற்சி செய்தார் என்பதை நீதி மன்றத்தில் நிரூபிக்க உதவியதால் 

கறை நல்லது 



Tuesday, March 29, 2011

இலங்கை நியூசிலாந்து போட்டி - பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

பஞ்சாங்கப் படி இன்று பகல் பன்னிரண்டு மணி வரை தசமி பிறகு ஏகாதசி. நட்சத்திரம் திருவோணம். செவ்வாய்க் கிழமை. யோகம் சித்த யோகம்.

கிழமைப் படி பார்த்தல் செவ்வாய்க்கிழமைக்கும் சிவப்புக்கும் சம்பந்தம் இருக்கிறது.  அதன்படி சிவப்புத் தோல் உள்ள நியூசிலாந்து ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது.  அதே சமயம் தசமி என்பது பத்தாம் எண்ணைக் குறிக்கிறது. பத்துத் தலை கொண்ட இராவணனின் நிலமான இலங்கைக்கு சாதகமான நிலை இது. பன்னிரண்டு மணிக்கு மேல் ஏகாதசி வருகிறது. இது பதினொன்றைக் குறிக்கும் என்பதால் பதினோரு பேரைக் கொண்ட இரு அணிக்கும் சம பலன் கிட்டும்.

மேலும், திருவோணம் என்பது நட்சத்திர வரிசையில் இருபத்திரண்டாவதாக வருகிறது. கூட்டினால் நான்கு. இலங்கை என்பது நான்கு எழுத்தில் வருவதால் நட்சத்திரப் படி இலங்கைக்கு வெற்றி கிட்டலாம்.  அதே நேரம் சித்தயோகம் - ஆறு எழுத்து, நியூசிலாந்து - இதுவும் ஆறு எழுத்து. எனவே, யோகம் நியூசிலாந்துக்கே சாதகம்.

இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும்போது, என்ன தோன்றுகிறது என்றால்,

..
..
..
..
..
..
..
..
..
இரண்டில ஏதாவது ஒன்று ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது, அதே நேரம், மேட்ச் டை ஆகவும் வாய்ப்புள்ளது. இதெல்லாம் வேணாம், எந்த டீம் ஜெயிக்கும்னு கரெக்டா சொல்லுண்றீங்களா? 

ஓகே, சொல்லறேன், ஆனா நாளைக்கு இந்த ப்ளாக் பக்கம் வாங்க, சொல்றேன்!

டிஸ்கி : எதுக்குத் தான் பஞ்சாங்கம் பார்க்கறதுன்னு விவஸ்தையே இல்லையா, போங்க, புள்ள குட்டிய படிக்க வைங்கப்பா!