அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, January 24, 2011

வாரச் சந்தை - 24.01.2011

ஒரு தத்துவம் 

என்னதான் அதுக்கு குடைமிளகாய்னு பேர் வச்சாலும் மழை பெய்யும்போது அதை எடுத்துகிட்டு போக முடியாது

ஒரு கவிதை 



இறந்து போன 
அக்பரை மட்டுமல்ல
உயிரோடு இருக்கும் 
தாத்தாவைக் கூட 
போட்டோவில்தான் பார்க்கிறது குழந்தை
தனிக் குடித்தனத்தின் தயவில் 


ஒரு குவிஸ்


ஒரு ஆளு பத்து ரூபாய்க்கு ஒரு தேங்காய்ன்னு வாங்கி எட்டு ரூபாய்க்கு ஒரு தேங்காய்ன்னு விக்கிறாரு. இருந்தாலும் இந்த வியாபாரத்தால அவர் லட்சாதிபதி ஆயிட்டார். எப்படி? 


(விடை : பின்னூட்டத்துல அனேகமா எல்லாருமே சொல்லிட்டாங்க)

ஒரு பொன்மொழி 


தங்கத்தோட இன்னிய விலை ஒரு கிராமுக்கு 1867 (ஹிஹி...தங்கத்துக்கு "பொன்"னுனு ஒரு பேரு இருக்கில்ல!)

ஒரு ஜோக் 



விஜய டி. ஆர்.: "வருகிற பிப்ரவரி மாதத்தில் ஈரோட்டில் லட்சிய தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறும். அது மாநாடு போல பிரமாண்ட பொதுக் கூட்டமாக இருக்கும்"
(இதைவிட ஒரு ஜோக் எனக்கு தோணலை)

28 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

செம காமெடி நண்பா! பொன் மொழியும், தனிக்குடித்தன கவிதையும் சூப்பர்! ராஜேந்தர் காமெடியும் அருமை!

தமிழ் 10 ல இணையுங்க பாஸ்! ( இன்ட்லியில் ஓட்டு போட்டுட்டேன் )

Philosophy Prabhakaran said...

// தங்கத்துக்கு "பொன்"னுனு ஒரு பேரு இருக்கில்ல! //

செம நக்கல்...

நீங்க அடைப்புக்குறிக்குள்ள எழுதியிருக்குற எல்லாமே ஜோக் தான்...

அனு said...

சந்தை இந்த வாரமும் களை கட்டியிருக்கு.. இந்த வாரம் 'கடி' ஸ்பெஷலா?.. கவிதைய தவிர எல்லாமே காமெடி வெரைட்டியா இருக்கு?? :)

அனு said...

க்விஸுக்கு விடை: அதுக்கு முன்னாடி அவர் கோடீஸ்வரரா இருந்திருப்பார்.. :)

Chitra said...

ஒரு பொன்மொழி


தங்கத்தோட இன்னிய விலை ஒரு கிராமுக்கு 1867 (ஹிஹி...தங்கத்துக்கு "பொன்"னுனு ஒரு பேரு இருக்கில்ல!)


......இந்த பொன்மொழிக்காகவே என் பொன்னான வாக்கை போட்டுவிட்டேன். சரியா?

இம்சைஅரசன் பாபு.. said...

//இறந்து போன
அக்பரை மட்டுமல்ல
உயிரோடு இருக்கும்
தாத்தாவைக் கூட
போட்டோவில்தான் பார்க்கிறது குழந்தை
தனிக் குடித்தனத்தின் தயவில் //

ரொம்ப டச்சிங் .......அண்ட் உண்மை கூட ....நல்ல இருக்கு PSV சார் .........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு தத்துவம்

என்னதான் அதுக்கு குடைமிளகாய்னு பேர் வச்சாலும் மழை பெய்யும்போது அதை எடுத்துகிட்டு போக முடியாது//

ஏன் மழை பெய்யும்போது எடுத்துட்டு போக முடியாது. அதெல்லாம் எடுத்துட்டு போகலாம். மழைக்கு அதை குடையா பிடிக்கத்தான் முடியாது

# எதிலும் குற்றம் கண்டுபிடிப்போர் சங்கம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரு ஆளு பத்து ரூபாய்க்கு ஒரு தேங்காய்ன்னு வாங்கி எட்டு ரூபாய்க்கு ஒரு தேங்காய்ன்னு விக்கிறாரு. இருந்தாலும் இந்த வியாபாரத்தால அவர் லட்சாதிபதி ஆயிட்டார். எப்படி? ///

அதுக்கு முன்னாடி கோடீஸ்வரனா இருந்திருப்பாரு..

மங்குனி அமைச்சர் said...

என்னதான் அதுக்கு குடைமிளகாய்னு பேர் வச்சாலும் மழை பெய்யும்போது அதை எடுத்துகிட்டு போக முடியாது///

ஏன் முடியாது ? ஒரு பிளாஸ்டிக் கவர்ல வச்சு எடுத்திட்டு ponaa malaila ninaiyaathu

மங்குனி அமைச்சர் said...

இறந்து போன
அக்பரை மட்டுமல்ல///

என்னது அக்பர் இறந்து போயிட்டாரா
??

மங்குனி அமைச்சர் said...

இந்த வியாபாரத்தால அவர் லட்சாதிபதி ஆயிட்டார். எப்படி? ////

சார் இது அதர பழைய ஜோக் ............ சமே, சமே பப்பி சமே ......... பாவம் ஒரு கோடீஸ்வரர் வாழ்க்கைல விளையாடி இருக்கீங்க

மங்குனி அமைச்சர் said...

தங்கத்தோட இன்னிய விலை ஒரு கிராமுக்கு 1867 (ஹிஹி...தங்கத்துக்கு "பொன்"னுனு ஒரு பேரு இருக்கில்ல!)///

பொன் மொழி .......... என்னது தங்கம் பேசுமா ????எந்த லாங்க்வேஜுல

மங்குனி அமைச்சர் said...

மாநாடு போல பிரமாண்ட பொதுக் கூட்டமாக இருக்கும்"////

ஏன் அன்னைக்கு அங்க எதுவும் மாட்டுச் சந்தை நடக்குதா ???

Madhavan Srinivasagopalan said...

/என்னதான் அதுக்கு குடைமிளகாய்னு பேர் வச்சாலும் மழை பெய்யும்போது அதை எடுத்துகிட்டு போக முடியாது//

அத மழையில எடுத்திட்டு போகலாமே....
என்ன மழையில நாமளும் நனைவோம் அவ்ளோதான்..
வேணும்னா ரெயின் கோட்டு போட்டுக்கிட்டு, பாக்கெட்டுல குறை மிளகாய எடுத்துட்டுப் போகலாம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதைவிட ஒரு ஜோக் எனக்கு தோணலை)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அந்த டீஆரு வெலாசம், வெலாசம் கிடைக்குமா?

பெசொவி said...

@ பன்னிகுட்டி
போகாத ஊருக்கு வழி தெரிஞ்சா அவரை அங்கேயே பாக்கலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டீஆரு இன்னுமா கட்சி வெச்சிருக்காரு? ஆமா போனவருசமே ஒருமீட்டிங் நடந்துச்சே?

பெசொவி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
டீஆரு இன்னுமா கட்சி வெச்சிருக்காரு? ஆமா போனவருசமே ஒருமீட்டிங் நடந்துச்சே?
//

அது போன வருஷம், இது இந்த வருஷம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

போனவருச மீட்டீங்கை நம்ம கடைல நடத்துனோம், இந்தவருசம் யாரோ?

பெசொவி said...

இப்படி பொதுவா சொன்னா எப்படி, லிங்க் கொடுக்கணும், பன்னி!

பெசொவி said...

@ மங்குனி

//பொன் மொழி .......... என்னது தங்கம் பேசுமா ????எந்த லாங்க்வேஜுல
//

இது எந்த லாங்குவேஜ்னு முதல்ல நீ சொல்லு

//சமே, சமே பப்பி சமே .........//

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம லட்சிய திமுகவுக்காக நாங்கள்லாம் எம்புட்டு பாடுபட்டு ஒழைச்சிருக்கோம்னு பாருங்க http://shilppakumar.blogspot.com/2010/09/blog-post_30.html

MANO நாஞ்சில் மனோ said...

//இதைவிட ஒரு ஜோக் எனக்கு தோணலை///

ஹேய் பன்னிகுட்டி கரடி விலாசம் தேடுதுடோய்......
சீக்கிரம் விலாசம் குடுத்துருன்கப்பா...... ரெண்டும் ஒரே நேர் கோட்டில் சந்திச்சதுன்னா ரெண்டுமே காலியாயிரும் பன்னிகுட்டி தியாகி ஆயிருவார் நான் அவருக்கு சிலை வைப்பேனாக்கும்...

எஸ்.கே said...

இந்த வார சந்தையும் ரொம்ப நல்லாயிருக்குங்க!

ஜோக், தத்துவம் கவிதை கலக்கல்!

R.Gopi said...

தல....

வழக்கம் போல சந்தை களை கட்டியது..

அது என்ன அந்த கோடீஸ்வரன் / லட்சாதிபதின்னு ஒரு அதர பழைய ஜோக்.. அல்மோஸ்ட் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்...

ஈரோட்டுல கரடிகள் மாநாடு நடக்க போவுதா? எப்போ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// R.Gopi said...
தல....

வழக்கம் போல சந்தை களை கட்டியது..

அது என்ன அந்த கோடீஸ்வரன் / லட்சாதிபதின்னு ஒரு அதர பழைய ஜோக்.. அல்மோஸ்ட் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்...

ஈரோட்டுல கரடிகள் மாநாடு நடக்க போவுதா? எப்போ?//////


செம கமெண்ட் கோபி..... ஹஹஹா கரடிகள் மாநாடுதான்..... !

செல்வா said...

ஹி ஹி ஹி ,, சந்தைல என்னவெல்லாம் விக்குறீங்க ?