அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, October 20, 2011

யதார்த்தக் கதைகள் - ஒரு இனிய(??!!) flashback

அந்த பஸ் பாரிமுனை நோக்கி போய்க் கொண்டிருந்தது. நெரிசலில் சிக்கித் திணறிய கோகுல் யதேச்சையாக அவளைப் பார்த்தான்.  அவள்.......அவளா......கல்யாணியா அவள்? மனம் பின்னோக்கி போனது.

காலேஜ் படிக்கும்போது, கல்யாணிதான் பலரின் கனவுக் கன்னி. அவள் தன்னிடம் ஒரு வார்த்தையாவது பேச மாட்டாளா என்று ஏங்கியவர்கள் அநேகம். கோகுலும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அவனும் அவளை நேசித்தான். ஆனால் அவளிடம் போய்ச் சொல்வதற்கு மற்றவர்களைப் போல் அவனும் பயந்தான். வெளியே சொல்லாமலே காலேஜ் முடித்து ஒரு வேளையில் சேர்ந்து,  கலாவிற்கு கணவனாகி, ஒரு பிள்ளையையும் பெற்றுவிட்டு இதோ இன்று கல்யாணியை பார்க்கிறான் கோகுல்.

அதிர்ஷ்டவசமாய் அவன் இறங்கும் ஸ்டாப்பிலேயே அவளும் இறங்க, வேகவேகமாய் அவள் பக்கம் வந்து, "நீங்க கல்யாணிதானே", என்று படபடப்புடன் கேட்க, அவள், "எஸ், நீங்க.....நீங்க கோகுல் இல்லே?" என்று கேட்கவும் இவன் அசந்து போனான்.  தன்னை இவள் இன்னமும் ஞாபகம் வைத்திருக்கிறாளே! 

"எப்படி இருக்கீங்க?" அவள்தான் தொடர்ந்தாள். பிரமிப்பு விலகாமலே இவன் பதில் சொன்னான்.

"ஓ, ஐ யாம் ஃபைன். வாட் அபவுட் யு?"

"நைஸ். என்ன பண்றீங்க?"
கோகுல் தான் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரை சொல்ல, "ஐ ஸீ.  நான் காலேஜ் முடிச்சதும் கோயம்புத்தூர் போனேன். அப்புறம் கல்யாணம் ஆயிடுச்சு, என் கணவருக்கு ரீசெண்டா சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆச்சு. போன வாரம்தான் இங்க வந்தோம்."

"அப்புறம் நீங்க எப்படி இருக்கீங்க? வாட் அபௌட் யுவர் பேமிலி?"

"ஓ, எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. மனைவி பேரு  கலா. ஒரு பையன், யுகேஜி படிக்கிறான்." பேசிக்கொண்டே வந்தவன், "வாட் அபௌட் ஹாவிங் எ டீ?" என்று கேட்க, "ஓ, ஷ்யூர்", சம்மதித்தாள்.
.
ரெஸ்டாரண்டில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது கோகுல்  ஆரம்பித்தான், "நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே!"

"நோ,நோ, சொல்லுங்க"

"நாம காலேஜ் படிக்கும்போதே உங்களை....................."இழுத்தான். வாய்விட்டு சிரித்தாள், கல்யாணி.

"ஐ நோ. ஐ நோ. சொல்லப்போனா, நீங்களாவே சொல்லனும்னு வெயிட் பண்ணினேன். பட் நீங்க பேசவே இல்லை".    கேட்கக் கேட்க தலை சுற்றியது, கோகுலுக்கு. 

"மை காட், அப்படினா, ஐ மிஸ்ட் தி பஸ் வெரி பேட்லி."

"ஓகே, சரி, விடுங்க, எங்க வீட்டு அட்ரெஸ் இதுதான். ஒரு நாள் நிச்சயம் உங்க மனைவிய கூட்டிகிட்டு எங்க வீட்டுக்கு வரணும். பை தி வே, உங்க மனைவி கோவிச்சுக்க மாட்டாங்களே?" சொல்லிக்கொண்டே விசிடிங் கார்டைக் கொடுத்தாள்.

கார்டை வாங்கிக் கொண்டவன், "நோ, நோ, கலா அப்படிப்பட்டவள் இல்லை, என்னை நன்றாக புரிந்துகொண்டவள். இதை தவறாகவே நினைக்க மாட்டாள்" என்று சொன்ன கோகுல் வீட்டுக்குப் புறப்பட்டான்.

கோகுலின் மனம் சிறகடித்தது. "அப்படியானால் அவளும் என்னை காதலித்திருக்கிறாள். சரி, போகட்டும். இப்போது மீண்டும் அவள் நட்பு கிடைத்திருக்கிறது. ஒரு நாள் நிச்சயம் மனைவியையும் கூட்டிக் கொண்டு அவள் வீட்டுக்குப் போக வேண்டும்" எண்ணிக்கொண்டே வீட்டை அடைந்தான்.

வீட்டு வாசலிலேயே நின்றிருந்த மனைவி கலா சந்தோஷமாக கிட்டே வந்தாள். "என்னங்க, உங்ககிட்ட ஒன்னு சொல்லணும். இன்னிக்கு காலையில மார்க்கெட் போனேனா, அங்க ஒருத்தரைப் பார்த்தேன். அவர் என்னோட காலேஜ் மேட் சந்துரு. அவரு இதுவரைக்கும் மதுரை பக்கத்தில வேலை பார்துகிட்டிருந்தாராம். நேத்து தான் சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்திருக்காரு. அவரை நான் காலேஜ் டேஸ்ல பார்த்தது. அவரு என்னைப் பார்த்தவுடனேயே அடையாளம் கண்டுபிடிச்சு பேசினாரு. அவருக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருக்காங்களாம். ஒரு நாள் நம்மை அவங்க வீட்டுக்கு கூப்பிட்டிருக்காரு, வர சண்டே போகலாமா?" மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தவளை இடைமறித்தான் கோகுல்.
"என்ன விளையாடறியா? என்ன நினைப்புல பேசறே, நீ? உனக்கு கல்யாணம் ஆகி ஒரு புள்ளைக்கும் அம்மாவாயிட்டு இப்ப என்னத்துக்கு உன் காலேஜ்ல படிச்சவனைப் பார்க்க போகணும்? அது எப்படி வெக்கமில்லாம உன் புருஷன்கிட்டே இப்படி பேசறே? அந்த சந்துருவுக்கு தான் அறிவு வேணாம்? ஏதுடா, என்னதான் நம்ம கூட காலேஜ்ல படிச்சிருந்தாலும் இப்ப இன்னொருத்தனுக்கு மனைவி ஆகிட்டாளே, இவகிட்ட போயி பல்லை இளிச்சு பேசறோமே அப்படின்னுலாம் அவனுக்கு தோணாதா?........................."
கத்திக் கொண்டே போனவனுக்கு பஸ்ஸில் வரும்போது நடந்த நிகழ்வுதான் ஞாபகத்துக்கு வரவே இல்லை.   

10 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

எஸ்.கே said...

Males are just males:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆணாதிக்காவாதிகள் ஒழிக.....

Madhavan Srinivasagopalan said...

அது எப்படின்னு தெரியல!
நா எதிர்பாத்த மாதிரியே கடைசி பாரா.. ?

அப்ப நானு ஆம்பளதான்.. ரைட்டு.

வெங்கட் நாகராஜ் said...

:))) இப்படித்தான் இருக்கும்னு நினைத்தேன்.

king of silambu said...

super nanba

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆணாதிக்காவாதிகள் ஒழிக ஒழிக....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

Males are just males:-)//

ஐயோ எஸ்.கே அசிங்கமா திட்டிட்டாரு

MANO நாஞ்சில் மனோ said...

ஆணாதிக்கவாதிகள் ஒழிக்க ஸாரி ஒழிக்க மறுபடியும் ஸாரி ஒழிக...

ஸ்ரீராம். said...

ஆளுக்கொரு ஆசை-ஊருக்கொரு நியாயம்! இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்...

விச்சு said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...