அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, April 22, 2010

எண்ணங்களை எழுதுகிறேன்

 எல்லோரும் அலசி ஆராய்ந்து ஒருவருக்கு ஒருவர் சொல்லடி (அதுவும் உங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி இல்லை) அடித்துக் கொண்டு வரும் விஷயம் விடுதலைப்புலி பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப் பட்ட விவகாரம்.

இதில் நானும் ஏதாவது சொல்லவில்லை என்றால் என்னாவது?

பார்வதி அம்மாள் தமிழர் என்பதை மறந்து விடுங்கள். அவர் மகன் இந்திய அரசின் பார்வையில் கொலைக் குற்றவாளி என்பதையும் மறந்து விடுங்கள். அவர் ஒரு வயதான, நோய்வாய்ப்பட்ட, எண்பது வயது மூதாட்டி. முறையாக இந்தியா வருவதற்கு விசா வழங்கப் பட்ட வெளிநாட்டுப் பயணி. அவரின் வயதையும் நோயின் தன்மையையும் கணக்கில் கொண்டாவது அவருக்கு அனுமதி வழங்கப் பட்டிருக்க வேண்டும். ஒரு வேளை அவரால் இங்கு ஒரு குழப்பம் விளையும் என்று நினைத்திருந்தால் அவரை காவல் துறையின் மேற்பார்வையிலாவது மருத்துவ சிகிச்சை பெற ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.  ஒருவரால் குழப்பம் ஏற்படும் என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம்; ஆனால் ஒரு சிறந்த அரசு நிர்வாகி என்று தன்னை நினைத்துக் கொள்ளும் யாரும் சொல்லக் கூடாது.  அப்படி ஒரு குழப்பத்தை முன்கூட்டியே கணித்து அதைத் தவிர்க்க இயலாதவர்கள் அரசு நாற்காலியைத் துறந்து விடவேண்டும்.

வாழ்க அரசின் சட்ட ஒழுங்கு கரிசனம்!
----------------------------------------------------------------------------------------------------------------------------

அரசு நிர்வாகத் திறமைக்கு இன்னொரு சான்று இதோ:

என் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாததால் மருந்து வாங்க கடைக்கு சென்றேன். ஒரு அதிர்ச்சி தகவல். எனக்கு ஒரு மருந்து (இரண்டே இரண்டு மாத்திரைகள் தான்)வேண்டும்; ஆனால் கடைக்காரர் கொடுக்க மறுத்துவிட்டார். சில மருந்துகளை பத்து பத்தாகத் தான் (அதாவது ஒரு பட்டையாக) வாங்க வேண்டுமாம். அப்படித்தான் விற்கச் சொல்லி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாம். சமீபத்திய "போலி மருந்து விற்பனை" விவகாரத்திற்குப் பின்னர் அரசு எடுத்திருக்கும் அதிரடி முடிவு இதுவாம்.  ஏனென்றால் ஒரு பட்டையாக இருந்தால் தான் அந்த மருந்தின் batch No., Expiry date போன்றவற்றை அறிய முடியுமாம்.

இது என்ன பைத்தியக்காரத் தனம்? பொதுவாக நோய்வாய்ப்பட்டவர்கள் விரைவில் நலம் பெறத் தான் எவரும் விரும்புகிறார்கள்.  அரசின் இந்த உத்தரவின்படி குறைந்தது பத்து நாட்கள் ஒருவர் உடல் நலமில்லாமல் இருக்க வேண்டும். போலி மருந்து விற்ற குற்றவாளிகளின் மீது முறையான நடவடிக்கை எடுத்து இது போன்ற முறைகேடுகள் இனிமேல் நடக்காத மாதிரி சட்டம் இயற்றுவதை விட்டுவிட்டு இதுபோல் மக்களை தேவையற்ற அளவில் மருந்து வாங்க வைப்பதை நினைத்தால்................ 

வாழ்க அரசின் மக்கள் நலக் கரிசனம்!   


டிஸ்கி : மக்களே, நானும் அரசியல் பேச ஆரம்பிச்சுட்டேன், கேட்டுக்குங்க, நானும் ரவுடிதான், ரவுடிதான்!

5 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

sathishsangkavi.blogspot.com said...

:)))))

Chitra said...

மக்களே, நானும் அரசியல் பேச ஆரம்பிச்சுட்டேன், கேட்டுக்குங்க, நானும் ரவுடிதான், ரவுடிதான்!


.....அதான், ஆட்டோவுக்கு பதிலா ஜீப் வருதாம்.

Madhavan Srinivasagopalan said...

Forcing to buy 10 tabs. (funny reason they say regd. Exp.) is ridiculous.

Please go to medical shop which does billing only by means of computer. Automatically, the bill will include Batch # Exp Date etc.. (as per the record they have in stock when supplied to the pharmacist).

Also, for our sake it's a good policy to preserve the bill, untill the medicine is over or the patient is adviced by Dr. to stop taking the medicines.

I wish (y)our mother gets cured soon.

Priya said...

நல்லதொரு அலசல்!

R.Gopi said...

இப்போ எல்லாம் புது மாத்திரை வாங்கணும்னா அதுக்கு எடைக்கு எடை பழைய மாத்திரை கொடுத்தால் தான் புதிய மாத்திரை கிடைக்குமாமே... அப்படியா??

“தல” ஏதாவது புது ரூல் போட்டு இருக்காரா??