அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Friday, August 20, 2010

ஐந்தே மாதங்களில் லட்சாதிபதியாக...................

யாருக்குமே பணக்காரனாக வேண்டும் என்று ஆசை இருக்கும். எப்படியாவது லட்சாதிபதி-அதாவது பல லட்சங்களுக்கு சொந்தகாரர்-ஆகவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? இதோ வழிகள் இரண்டு.

முதல் வழி கொஞ்சம் சுலபம்
உங்கள் வங்கி கணக்கு எண்ணையும், உங்கள் இ-மெயில் ஐ.டி.யையும்...............தர வேண்டாம். அம்மாதிரி உங்களை ஏமாற்றும் எண்ணம் எனக்கு இல்லை. அதே போல், குறுக்கெழுத்துப் போட்டி, ஏலச்சீட்டு போன்ற திட்டங்களும் நான் சொல்லப் போவது இல்லை. இதெல்லாம் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும். நம்முடைய உழைப்பை மட்டும் நாம் நம்ப வேண்டும் தானே?

அதனால் நீங்கள் செய்ய வேண்டியது என்னன்னா..............ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கிக்கு சென்று உங்கள் கணக்கில் இருபதாயிரம் ரூபாய் போட்டு வாருங்கள். சரியாக ஐந்தே மாதங்களில் நீங்கள் ஒரு லட்சத்துக்கு சொந்தக்காரர் ஆகிவிடலாம்.

(ஹலோ, இதுக்கே டென்சன் ஆனா எப்படி? ரெண்டாவது ஐடியாவையும் படியுங்க!)

இரண்டாவது வழி: இது கொஞ்சம் கஷ்டமான வழி. ஒரு முக்கியமான கண்டிஷனும் இருக்கு. ஆனா ஒண்ணு, இந்த வழியில சில மாதங்களிலேயே நீங்கள் பல லட்சங்களுக்கு அதிபதியாகி விடலாம். அது மட்டுமில்லை, இதுக்கு நீங்க வங்கியில பணம் போட வேண்டிய அவசியமும் இல்லை. நீங்க என்ன செய்யணும்னா, ஒவ்வொரு நாளும் உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ பணம் செலவு பண்ணனும். குறைஞ்சது ஒரு மாசத்துக்கு பத்து லட்ச ரூபாய் செலவு பண்ணனும் அப்படி செஞ்சா, ரெண்டு மூணு மாசத்துலயே பல லட்சங்களுக்கு சொந்தக்காரர் ஆகலாம்.

கண்டிஷன் சொல்ல மறந்துட்டேனே, நீங்க ஆரம்பத்துலேயே கோடீஸ்வரனா இருக்கணும்!

டிஸ்கி : இந்தப் பதிவுக்கும் டிவியில் வர ஒரு விளம்பரத்துக்கும் சம்பந்தம் இருக்கு, புரிந்து கொண்டவர்கள் பின்னூட்டலாம்.

25 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

//கண்டிஷன் சொல்ல மறந்துட்டேனே, நீங்க ஆரம்பத்துலேயே கோடீஸ்வரனா இருக்கணும்!//

அப்ப... எப்படி கோடிஸ்வரனாவதுன்னு சொல்லுங்க முதல்ல..

Ramesh said...

காமெடி பன்றீங்கன்னு பார்த்தா...எதோ அரசியல் பன்றீங்க போல இருக்கு...

பெசொவி said...

@ Madhavan

//அப்ப... எப்படி கோடிஸ்வரனாவதுன்னு சொல்லுங்க முதல்ல.. //

சுலபத்தில் கோடீஸ்வரர் ஆக.........ன்னு ஏதாவது பதிவு இருக்கானு பாத்து தெரிஞ்சுக்குங்க! எல்லாத்தையும் நாமளே சொல்ல முடியுமா?
:)

Unknown said...

கடைசியில் கவுதிட்டிங்க

Prathap Kumar S. said...

நீங்க ஒரு நிதிமையச்சரா வந்திருக்கலாமே சார்... நாட்டுக்க எவ்ளோ பெரிய இழப்பு...

கண்ணகி said...

நல்லாத்தான் அய்யிடியா....குடுக்க்றீங்க..

என்னது நானு யாரா? said...

தல! எப்படிங்க இப்படியெல்லாம் சொரிஞ்சு சொரிஞ்சு உடம்பெல்லாம் ரத்த களரி ஆயிடிச்சி.

கடிங்க ரொம்ப கடிங்க! அருமை! உங்க சேவை நாட்டுக்கு தேவை!

அப்புறம் நம்ப கடை பக்கம் உங்களை காணமே! களத்தில இறங்கும் போது ஊக்கம் கொடுத்தீங்க! அப்புறம் அம்போன்னு விட்டா எப்படி? கைப்புள்ளைக்கு நீந்தவும் தெரியாதுன்னு உங்களுக்கு தெரியும் இல்ல. வாங்க வந்து கைப்புள்ளையை கறை சேக்கிற வழிய பாருங்க!

Srividhya R said...

first idea is good. Everybody should possess that habit of "Saving". But that account should not have a shopping card/debit card :))))))

வெங்கட் said...

// ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கிக்கு
சென்று உங்கள் கணக்கில் இருபதாயிரம்
ரூபாய் போட்டு வாருங்கள்.

சரியாக ஐந்தே மாதங்களில் நீங்கள்
ஒரு லட்சத்துக்கு சொந்தக்காரர் ஆகிவிடலாம்.//

ஓ.. அப்ப 1-ம் தேதி நம்ம கணக்குல
20,000 ரூபா பணம் போடறோம்..
10-ம் தேதி அதை எடுக்கறோம்..

மறுபடியும் அடுத்த மாசம்
1-ம் தேதி பணம் போடறோம்.,
10-ம் தேதி பணம் எடுக்கறோம்..

இப்படி பண்ணினா கூட 5 மாசத்துல
நாங்க லட்சாதிபதி ஆக முடியுமா..??

ஹி.,ஹி., ஹி..

( நடுவுல பணம் எடுக்க கூடாதுன்னு
நீங்க கண்டிஷன் ஒன்னும் சொல்லலியே..!! )

கருடன் said...

@வெங்கட்
//( நடுவுல பணம் எடுக்க கூடாதுன்னு
நீங்க கண்டிஷன் ஒன்னும் சொல்லலியே..!! ) //

இப்பவது தெரியுதா எங்க தலைவர் அறிவு... ஹி ஹி ஹி...

பெசொவி said...

@ Venkat & TERROR PANDIAN

ஆஹா............ஒரு முக்கியமான டிஸ்கி போட விட்டுட்டேன்.
டிஸ்கி1. இந்த பதிவு அறிவுபூர்வமா யோசிச்சு நாம சொல்றதை மட்டும் கேக்கறவங்களுக்கு மட்டும்தான்.
டிஸ்கி 1 a. குறிப்பா சொல்லனும்னா VAS மெம்பர்களுக்கு கிடையாது .

கருடன் said...

//டிஸ்கி1. இந்த பதிவு அறிவுபூர்வமா யோசிச்சு நாம சொல்றதை மட்டும் கேக்கறவங்களுக்கு மட்டும்தான்.//

தலை இப்படி எல்லாம் அவசரபட்டு டிஸ்கி போடதிங்க... அறிவுபூர்வமா யோசிச்சா முதலில் உங்க ப்ளாக் படிக்கரத நிறுத்திடுவாங்க...

பெசொவி said...

//நாஞ்சில் பிரதாப் said...

நீங்க ஒரு நிதிமையச்சரா வந்திருக்கலாமே சார்... நாட்டுக்க எவ்ளோ பெரிய இழப்பு... //

இத.....இதத் தான் பான்-கீ-மூனும் (ஐ.னா. சபை தலைவர்தான்) நேத்து நைட் போன் பண்ணி சொன்னார். உலக வங்கிக்கே தலைவர் ஆகற தகுதி எனக்கு மட்டும்தான்இருக்குதாமே!

செல்வா said...

///டிஸ்கி : இந்தப் பதிவுக்கும் டிவியில் வர ஒரு விளம்பரத்துக்கும் சம்பந்தம் இருக்கு, புரிந்து கொண்டவர்கள் பின்னூட்டலாம்.
அத விட எங்க வெங்கட் அண்ணனும் இதே மாதிரி ஒரு பதிவு போட்டிருக்கார். மாதம் இருபதாயிரம் மிச்சப்படுத்துவது எப்படி ..?

செல்வா said...

//குறிப்பா சொல்லனும்னா VAS மெம்பர்களுக்கு கிடையாது .///
சரியா சொன்னீங்க. அறிவுப்பூர்வமா யோசிச்சா அப்புறம் எங்க நீங்க சொல்லுறத கேக்குறது..?!?

அருண் பிரசாத் said...

தல இப்படி வாரிவிட்டுடீங்களே அதுவும் எதிர்கட்ட்சி கிட்ட.

நிலாமதி said...

ஆகா வாசகர்களைக் கவர இப்படியும் தந்திரமா? நாங்க எத்தனைபேர பார்தோமில்ல

Madhavan Srinivasagopalan said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said.."சுலபத்தில் கோடீஸ்வரர் ஆக.........ன்னு ஏதாவது பதிவு இருக்கானு பாத்து தெரிஞ்சுக்குங்க! எல்லாத்தையும் நாமளே சொல்ல முடியுமா?"//

இப்படி சொல்லுவீங்கன்னு எனக்குத் தெரியும்.. அதான் நானே ஐடியா கொடுத்திட்டேன்.. இங்க வந்து படிங்க..
http://madhavan73.blogspot.com/2010/08/blog-post_20.html

Chitra said...

First Idea: அடேங்கப்பா.....!

ராஜவம்சம் said...

அண்னா எப்டிங்னா முடியலிங்னா
இதையே ஐஞ்ஞி மாசத்துக்கு முன்ன சொல்லிருந்தீங்னா இன்னைக்கு நா லட்சாதிபதிங்னா

ஸ்ரீராம். said...

முதல் ஐடியா செயல் படுத்தறதுன்னு தீர்மானிச்சிட்டேன்... பேங்க் குக்கு கிளம்பிட்டேன்... இந்த மாத இருபதாயிரம் கொடுத்தீங்கன்னா என் கணக்குல போட்டுட்டு வந்துடுவேன்...

மதன் said...

இந்த கும்பல்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கரது தான் சேஃபோ????, ரைட்டு பாஸ் நடத்துங்க

பெசொவி said...

//Congrats!

Your story titled 'ஐந்தே மாதங்களில் லட்சாதிபதியாக...................' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st August 2010 04:50:01 AM GMT



Here is the link to the story: http://ta.indli.com/story/324388

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team//

Thank you voters!

மங்குனி அமைச்சர் said...

எச்சூச்மி , இந்த பணம் பணம் அப்படின்கிரிகளே , அப்படின்னா என்ன சார் ?
ஏன் அஞ்சு மாசம் 20000 போடணும் ? பேசாம அஞ்சாவது மாசம் போடப்போற 20000 ஆயிரத்தை முதல் மாசத்திலேயே போட்டா முதல் மாசத்திலேயே லட்சாதிபதி ஆயிடலாமே .

R.Gopi said...

ரொம்ப சொறிஞ்சுட்டீங்களே தல....