அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, September 9, 2010

நீயும் நானும்

முன் டிஸ்கி : ரொம்ப நாளாச்சு, கவிதை(?!) எழுதி.

நீ அருகிலிருந்தால்
நெருப்பும் குளிர்கிறது,
வெயிலும் இதமாய் இருக்கிறது.

நீ அருகிலிருந்தால்
காயங்கள் கூட வலிக்கவில்லை


நீ விலகிப் போனால்
மழையும் சுடுகிறது, 
இதயத் துடிப்புகூட
சுமையாய்ப் போனது.


&&&&&&&&&&&&&&&&&&


உன்னைப் பார்த்த கணமே
என்னுள் நுழைந்து 
இதயத்தில் இடம் பிடித்து 
என்னை இம்சிக்கிறாயே,
என்று முடியும் இந்த
எல்லை தாண்டிய 
பயங்கரவாதம்?


டிஸ்கி : நல்லா பாத்துக்கோங்க, நெருப்பு, காயம், பயங்கரவாதம் - இதெல்லாம் சொல்லியிருக்கேனா? போன பதிவு டிஸ்கில சொன்னா மாதிரி சீரியஸா ஒரு பதிவு போட்டுட்டேன், நாங்கல்லாம் சொன்னதை செய்வோம், செய்ததை சொல்வோம்.

25 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

கருடன் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பபபப.... இதுக்கு போன பதிவு எவ்வளோ தேவலாம்... நான் போய் போன பதிவு திரும்பி படிக்கிறேன்.

அருண் பிரசாத் said...

ஏதோ கவிதை எழுதி இருக்கறதா சொன்னீங்க. அது எங்க?

கருடன் said...

@அருண்
இவர் ரொம்ப நல்லவர் மச்சி.. நேத்து ரமேஷ் போட்டோ 3 இடத்துலா பாத்தாரு இல்ல... அதான் அதிர்ச்சில இப்படி ஆகிட்டாரு...

அருண் பிரசாத் said...

@ டெரர்

ஓ அதுதான் விஷயமா! சரி ஆனா இதுல யாரையோ பத்தி எழுதி இருக்காரே யார் அது? ரமெஷா?

கருடன் said...

இல்லை மச்சி அது அவங்க வீட்டு பக்கத்துல வடை சுட்டு விற்க்கர பாட்டி பத்தி...

அருண் பிரசாத் said...

//நீ அருகிலிருந்தால்
காயங்கள் கூட வலிக்கவில்லை//

அவங்க உங்க வீட்டு டாக்டர்ரா?

கருடன் said...

//வெயிலும் இதமாய் இருக்கிறது.//

நல்லா உச்சி வெயில்ல சுத்தி இருப்பாரு போல.... எலுமிச்சபழம் தேவைபடுமோ...

கருடன் said...

அருண்
//அவங்க உங்க வீட்டு டாக்டர்ரா?//

அடிக்கிறதே அவங்கதான்... அதான் வலிக்கலியே வலிக்கலியே!! அப்படினு நடிக்கிறார்....

கருடன் said...

//என்று முடியும் இந்த
எல்லை தாண்டிய
பயங்கரவாதம்?//

நீங்க கவிதை எழுதரத நிறுத்தினதும்...

இம்சைஅரசன் பாபு.. said...

// இல்லை மச்சி அது அவங்க வீட்டு பக்கத்துல வடை சுட்டு விற்க்கர பாட்டி பத்தி//
மக்கா என்ன வடை சுட்டு விக்கிருங்க கேளுங்க என்னோட டவுட் கேக்கணும்

இம்சைஅரசன் பாபு.. said...

//இதயத்தில் இடம் பிடித்து
என்னை இம்சிக்கிறாயே//

இப்படி கவிதை எழுதி எங்கள இம்சிக்காதீங்க

vasu balaji said...

ரைட்டு:)

Prathap Kumar S. said...

அய்யோ காப்பாத்துங்க... என்ன இருந்தாலும் என் ரேன்சுக்கு கவுஜ எழுத முடியாது...:))

Madhavan Srinivasagopalan said...

__________
| " " |
| | |
| __ |
| / \ |
\________/

வெங்கட் said...

@ அருண்.,

// ஏதோ கவிதை எழுதி இருக்கறதா சொன்னீங்க.
அது எங்க? //

// முன் டிஸ்கி : ரொம்ப நாளாச்சு, கவிதை(?!) எழுதி. //

இதோ... இங்கே இருக்கே..!!

என்னது நானு யாரா? said...

//என்று முடியும் இந்த
எல்லை தாண்டிய
பயங்கரவாதம்?//

அதே கேள்வியை தான் உங்க கிட்ட நாங்க கேக்குறோம். பதில் சொல்லுங்க பங்காளி!

பெசொவி said...

@ Venkat

// முன் டிஸ்கி : ரொம்ப நாளாச்சு, கவிதை(?!) எழுதி. //

இதோ... இங்கே இருக்கே..!!//

அது மட்டுமில்லை வெங்கட், வகைகள் பாருங்கள் அதுல கூட "கவிதை" இருக்கு!

பெசொவி said...

@ Madhavan

கவிதை(?!) புரிஞ்சா புரியுதுன்னு சொல்லுங்க, இல்லைனா புரியலைன்னு சொல்லுங்க, இப்படி ஒரு கமெண்ட்(???????!!!!!!!!!!) போடலாமா? அவ்.................

பெசொவி said...

@ இம்சைஅரசன் பாபு

//இப்படி கவிதை எழுதி எங்கள இம்சிக்காதீங்க //

ஒத்துகிட்டாரு, ஒத்துகிட்டாரு, என்னோடது கவிதைன்னு ஒத்துகிட்டாரு, நீங்க நிச்சயமா இம்சை அரசன் இல்ல, இனிமை அரசன்!

பெசொவி said...

@ Arun & Teror

இது வெங்கட்டோட ப்ளாக் இல்லை, இருந்தும் இங்கே வந்து கும்மி அடிக்கிறீங்களே, இது நியாயமா?
ஆனாலும் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதமும் இனிமையா தான் இருக்கு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//@அருண்
இவர் ரொம்ப நல்லவர் மச்சி.. நேத்து ரமேஷ் போட்டோ 3 இடத்துலா பாத்தாரு இல்ல... அதான் அதிர்ச்சில இப்படி ஆகிட்டாரு... //

அடப்பாவிகளா எனக்கு தெரியாமலையே என்னை கலாய்க்கிறீங்களே. ஒரு வார்த்தை சொல்ல கூடாதா?

Madhavan Srinivasagopalan said...

/^^^^^^^^^\
|.."..."..|
|....|....|
|....0....|
|.../.\...|
\=========/

This is what I tried to say.. (since whitespaces are not rightly reproduced, I made this with extra '.' periods. Remove these periods with white space to realize my face after reading this kavithai.

Chitra said...

ok! ok! ok!

:-)

velji said...

என்னல்லாம் பண்றோம்...கவித எழுத மாட்டமா..என்ன?!

செல்வா said...

இது சீரியஸ் பதிவாம்ல ... அதுக்குதான் நான் போன பதிவுலையே சீரியஸ்லாம் வேண்டாம்னு சொன்னேன் ..!!