அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, November 8, 2010

நல்லா இருப்பியா நீயி?

பாவி மனுசி, நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தா, உனக்கு பொறுக்கலையா?

அப்படி என்ன கொடுமை உனக்கு செஞ்சேன்? எத்தனையோ தடவை எங்களை மாதிரி யாரோ ரெண்டு பேர் உனக்கு செஞ்சிருக்கற நன்மைகளை நினைச்சிருந்தா, நீ இப்படி பண்ணியிருப்பியா?

எங்க ரெண்டு பேரையும் பாக்கற எல்லாருமே "ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கு"ன்னு வாய் விட்டு புகழறாங்க. அது உனக்கு காதுல நாராசமா இருக்கா, பாவி?

ஐயோ, என் கண் எதிர்க்க என்னவரை என்கிட்டேயிருந்து பிரிச்சுட்டியே, நான் இல்லாம அவர்  இல்ல, அவர் இல்லாம நான் இல்ல, இது கூட புரிஞ்சுக்க முடியாத நீ சரியான தண்டம். இங்க பாரு, மரியாதையா எங்க ரெண்டு பேரையும் சேர்த்து விட்டுடு, இல்ல, எங்க ரெண்டு பேருக்கும் வாழ்க்கையே இல்ல.

அடப் பாவிகளா, நான் சொல்றது அவ காதுலதான் விழலை, உங்க காதுகளுமா செவிடாயிடுச்சு? சேர்த்து விடுங்களேண்டி, ப்ளீஸ்............!

டிஸ்கி : ஏங்க, தன்னோட ஜோடிய பிரிஞ்சு இவ வாடுறது உங்களுக்காவது புரியுதா? 
கொஞ்சம் கீழே பாருங்க...................








அதோட ஜோடி இங்க இருக்கு.



23 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ஜெயந்த் கிருஷ்ணா said...

வந்துட்டேன் ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

தலைவா இது கொஞ்சம் கூட சரியில்ல...

நமக்கே பட்டாசு வேடிக்கிறீங்களா...

கருடன் said...

என்ன, பதிவைப் படிச்சீங்களா? பிடிச்சிருக்கா, சந்தோசம். பிடிக்கலையா, பரவாயில்லை. உங்கள் கருத்துகள் எதுவானாலும், என் வளர்ச்சிக்கு தேவைதான். உங்கள் கருத்துகளை இங்கே எழுதவும், நன்றி!

(நீங்க மொக்க போட்டா நானும் இப்படி மொக்க போடுவேன்...)

Madhavan Srinivasagopalan said...

அடாடா.. இப்பத்தான் ஆவி மேட்டர எழுதிட்டு வந்தா, நம்மள மாதிரியே மொக்குராங்களே.
இதைத்தான் அப்பவே சொல்லிட்டாங்களோ.. 'முற்பகல் மொக்கினால், பிற்பகல் மொக்கப்படுவாய்'

இம்சைஅரசன் பாபு.. said...

அட ரெண்டு மண் புழு ரௌண்டா சுத்தி கிடக்குது ..............ஏன் சார் மண் புளுவ பிரிசீங்க .............

அருண் பிரசாத் said...

இப்படியா ஒரு ஜோடிய பிரிக்கறது???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்ம்ம் எல்லாரும் ஒரு முடிவாத்தான் இருக்கீங்க....!

எஸ்.கே said...

ஒரு கம்மலை காணோம்னு புகார் கொடுத்துருக்கீங்களா!!
கல்வலைப்படாதீங்க போலீஸ் கண்டுபிடித்து தருவார்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகா.. அருமை..
விளக்கமான கருத்துக்களுடன், விளங்கிவிடும்(?) படங்களும், கண்களில் கண்ணீரும், கைகளில் புகையும்,
உம்..
நடத்து தொரை...
ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@டெரர்

அடப்பாவிகளா..

மாட்ரேஷன் வெச்சிருக்கும் ப்ளாக்கா இது..

அப்புறம் எப்படி கும்மறது..

டெரர்.. என்னானு பாரு...?

பெசொவி said...

// பட்டாபட்டி.. said...
@டெரர்

அடப்பாவிகளா..

மாட்ரேஷன் வெச்சிருக்கும் ப்ளாக்கா இது..

அப்புறம் எப்படி கும்மறது..

டெரர்.. என்னானு பாரு...?
//

ஒரு த்ரில்லுக்குத் தான் அப்படி வச்சிருக்கேன், அதுனால மனம் தளர வேண்டாம், கும்மி எனக்கு ரம்மி மாதிரி..............(ரம்மின்னா, ரம்யா இல்லப்பா......................)

என்னது நானு யாரா? said...

நீங்க ஜோடின்னு சொன்னப்போ செருப்புன்னு நினைச்சேன். அதுக் கம்மலா மாறிப்போச்சு! ஆனா நான் ஏமாறலயே

ஸ்ரீராம். said...

எங்கேருந்துங்க பிடிக்கறீங்க ஐடியா எல்லாம்...!

Chitra said...

வாழைப்பழ ஜோக் நியாபகம் வருதே..... ஒரு கம்மல் இங்கே இருக்கு. இன்னொரு கம்மல் எங்கே? ஹா,ஹா,ஹா....

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

ஐயோ.. எங்களை இப்படி
படுத்தறீங்களே., " This Post Tittle "

சிவராம்குமார் said...

நம்ம ரமலத் பேசுதுன்னு நெனச்சேன்!!!

Ravi kumar Karunanithi said...

this is too too much

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என் ஜோடி செருப்புல ஒன்னை பிரிச்சு என்னை நானே அடிச்சிக்கிறேன். இனி இந்தப்பக்கம் வ்ருவ?வ்ருவ?

மங்குனி அமைச்சர் said...

இம்ஹும் ........... இவரு அந்த வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டாரு .........

வெங்கட் நாகராஜ் said...

ஜோடிப் பொருத்தம் நல்லாத்தான் இருக்கு - அதைப் போய் பிரிச்சிட்டீங்களே - நீங்க நல்லா இருப்பீங்களா?.... ம்ம்ம்ம்ம்ம்ம் கொஞ்சம் ஓவரோ????

R.Gopi said...

என்ன சொல்ல வர்றீங்க தல?

செல்வா said...

இதுக்கு பேரு என்ன ..?
மொக்கையா ..?

Madhavan Srinivasagopalan said...

//இவரு அந்த வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டாரு //

மங்கு, இவரு பட்டணத்துக்கு போறதுக்கு முன்னாடியாவது, 'எதுக்கு' இவரு சரிப் பட மாட்டாருன்னு சொல்லிடுவீங்களா..?